நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி 48 பேர் பலி
கென்யாவில் டிரக் ஒன்று ஜூன் 30 ஆம் தேதி மாலை கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை கெரிச்சோவை நோக்கிச் சென்ற டிரக் ஒன்று நெரிசல் மிகுந்த சாலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து 8 வாகனங்கள் மற்றும் பல பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பயங்கர விபத்து குறித்து கென்யா அதிபர் வில்லியம் வருத்தம் தெரிவித்துள்ளார்.Tags :