தெலுங்கானாவில் சிஐ அதிகாரி தற்கொலை
<br /> தெலுங்கானா அனந்தபூர் மாவட்டம் தாடிபத்ரி பகுதியை சேர்ந்த சிஐ ஆனந்த ராவ் நேற்று தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு எச்சரிக்கை அலுவலராக பணிபுரிந்த அவர், நேற்று நள்ளிரவு வரை ஊழியர்களுடன் பேசினார். பின்னர் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். பணி அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்.Tags :