மகளிர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படுத்தபடும் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ரூ.13.07 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடங்கள், சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் ரூ.3.42 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
Tags :