தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் குட்கா பறிமுதல்...

by Editor / 24-07-2023 10:30:46am
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் குட்கா பறிமுதல்...

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை டி.என். நகர் பகுதியில் லட்சுமி காந்த்/33 என்பவர் அரக்கோணம் அடுத்த கைனூர் கிராமத்தில் குடோனின் பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட 3 டன் எடை கொண்ட ரூ.5 லட்சம்  மதிப்புடைய போதைப் பொருள் இன்று அதிகாலை 2 மணி அளவில் நகர காவல் ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். பதுக்கி வைத்திருந்த லட்சுமி காந்த் கைது செய்து விசாரணை.

 

Tags :

Share via