அரசு விவசாயிகளின் வலிகளையும் தேவைகளையும் புரிந்து கொண்டுள்ளது - பிரதமர் மோடி ..
ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் மக்களின் ஆதரவுக்கு மத்தியில் பிரமாண்ட பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் ராஜஸ்தானின் முக்கியமான ஆன்மீக பிரமுகர்களை நினைவு கூர்ந்தார் மற்றும் சிகார் மக்களின் இருப்பை ஒப்புக்கொண்டார். பிரதமர் மோடி, “மக்களின் உற்சாகம்,ஆதரவு பாஜகவிற்கு உள்ளது என்பதை காட்டுகிறது.எங்கள் கட்சியின் தாமரை சின்னம் வெற்றி பெறும் என்றும், மீண்டும் தாமரை மலரும் என்றும் மக்கள் முடிவு செய்துள்ளனர்..ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. சிகார் மற்றும் ஷேகாவதி பகுதிகளின் விவசாயிகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு, நிலப்பரப்பின் கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவர்களது கடின உழைப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசு விவசாயிகளின் வலிகளையும் தேவைகளையும் புரிந்து கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் விதை முதல் சந்தை வரை புதிய அமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை பிரதமர் மோடி விளக்கினார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் சர்வதேச விமான நிலையம் மற்றும் 860 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.. அரசும் மக்களும் இணைந்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசின் உதவியுடன் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.. மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அவர் கூறினார். தற்போது ராஜ்கோட் வளர்ச்சி இயந்திரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்..
Tags :