அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் நிலநடுக்கம்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயரில் இருந்து 151 கி.மீ. தூரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவு 12.53 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. இந்நிலையில், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பெர்கா என்ற இடத்திற்கு 123 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : Earthquake in areas adjacent to Andaman and Nicobar Islands.