மணிப்பூரில் ஊரடங்கு தளர்வு
மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த சில நாட்களாக அங்கு கலவரம் கொழுந்து விட்டு எரிகிறது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், மணிப்பூரில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதன்படி, மணிப்பூரில் பொதுமக்கள் காய்கறிகள், மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இன்று அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 7 மணி நேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
Tags :