வயநாடு செல்கிறார், ராகுல் காந்தி.
கேரள மாநிலம் வயநாடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனைவிதித்ததை தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பதாக பாராளுமன்ற செயலகம் அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை தொடர்ந்து பாராளுமன்ற செயலகம் எம்பி பதவியில் செயல்பட மீண்டும் அளித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டிருக்கும் ராகுல் காந்தி வரும் 12 மற்றும் 13ஆம் தேதி தம் வயநாடு தொகுதி மக்களை சந்தித்திப்பதோடு பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளார்.
Tags :