ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 5 தலிபான்கள் பலி

by Editor / 23-07-2021 10:41:14am
ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 5 தலிபான்கள் பலி

ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  ஆப்கனின் வர்தக் மாகாணத்தில் உள்ள சயாத் அபாத் பகுதியில் தலிபான்கள் ஒன்றுகூடியிருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதிகளில் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்த சம்பவத்தில் 5 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,  மேலும் இந்த தாக்குதலில் ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.  ஆப்கனில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வரும் நிலையில் இருதரப்பு மோதலால அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via