நாங்குநேரி சென்று கருத்துக்கள் கேட்கப்படும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு

by Staff / 14-08-2023 06:07:24pm
நாங்குநேரி சென்று கருத்துக்கள் கேட்கப்படும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு

நாங்குநேரி சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் கருத்து கேட்கப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி நாங்குநேரியில் பள்ளி மாணவன், அவரது சகோதரியை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. மாணவன் படித்த பள்ளி, வீடு, சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு எதிராக வன்கொடுமை நடைபெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சந்துரு தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via