பணிச்சுமை காரணமாக தற்கொலை

by Staff / 15-08-2023 04:24:43pm
பணிச்சுமை காரணமாக தற்கொலை

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவரது மகன் 23 வயதான பிரசாந்த், இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார், கடந்த சில மாதங்களாக, பணிச்சுமையால் அதிக மன உளைச்சல் ஏற்படுவதாக கனேசனிடம் பிரசாந்த் கூறிவந்தார் இதனால், கடந்த12 தேதி தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கோவைக்கு வந்து தாய் தந்தையுடன் தங்கியிருந்தார், இந்த நிலையில், நேற்றுமுன்தினம் தனது அறைக்கு சென்ற பிரசாந்த், நீண்ட நேரமாக அறை கதவை திறக்காததால் நேற்று கனேசன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரசாந்த் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பிரசாந்த் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து கணேசன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via