மணிப்பூர் விரையும் கம்யூனிஸ்ட் குழு

by Staff / 21-08-2023 11:53:53am
மணிப்பூர் விரையும் கம்யூனிஸ்ட் குழு

மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வந்த நிலையில், மாநிலமே முடங்கி கிடந்தது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தலைமையிலான குழு இன்று (ஆகஸ்ட் 21) மணிப்பூர் செல்கிறது. இக்குழு இன்று முதல் 24ஆம் தேதிவரை தொடர்ந்து 4 நாட்களுக்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via