இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் அண்ணன் தங்கை சம்பவ இடத்திலேயே பலி.
தேனிமாவட்டம் கோகிலாபுரத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் சங்கிலிவேல் (12), மேகாஸ்ரீ (9). இவா்கள் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தனா்.
இந்த நிலையில், காா்த்திகேயனின் உறவினரான கோகிலாபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் (21) என்பவருடன் அண்ணன், தங்கை இருவரும் இருசக்கர வாகனத்தில் பழனிசெட்டிபட்டியிலிருந்து தேனிக்கு சென்றனா். தேனி, நேருசிலை மும்முனை சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது பின்னால் இருந்து வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சிறுவர்,சிறுமி மேகாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சங்கிலிவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இருசக்கர வாகனத்திலிருந்து சாலையில் விழுந்ததில் காயமடைந்த சண்முகவேல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவுசெய்து லாரி ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : லாரி மோதியதில் அண்ணன் தங்கை சம்பவ இடத்திலேயே பலி.