இளம் பேச்சாளர்கள் தமிழக்கு கிடைத்த பரிசு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

by Staff / 23-08-2023 01:42:00pm
இளம் பேச்சாளர்கள் தமிழக்கு கிடைத்த பரிசு முதல்வர்  மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளம் பேச்சாளர்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பரிசு என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இளம் பேச்சாளர்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பரிசு. மேடைகளில் பேசுபவர்கள் தங்களுக்கென தனி பாணி கொண்டிருப்பார்கள். எண்ணங்களை அழுக்காக்கும் விஷயங்களை மாணவர்கள் புறந்தள்ள வேண்டும். இளம் பேச்சாளர்களின் உரைகள் வருங்காலங்களில் பலருக்கும் கையேடாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via