நாடாளுமன்றத்தில் உரையாற்றும் குடியரசுத் தலைவர்
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்றம் வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர். நாடாளுமன்றத்தின் மைய அரங்கில், தற்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி வருகிறார். 2047ஆம் ஆண்டுக்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க வேண்டியது அவசியம். வறுமையை ஒழிக்க வேண்டியதும் அவசியம். நாட்டின் வளர்ச்சியில், இளைஞர்களும், பெண்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார்.
Tags :