கணவர் மீது ஆசிட் ஊற்றிய மனைவி
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டப்பு குப்தா என்பவரது மனைவி பூனம். குப்தா மதுவுக்கு அடிமையாகி குடும்ப வாழ்க்கையை சிதைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு மிக தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி பூனம் கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் ஆத்திரத்தில் கணவர் மீது பூனம் ஆசிட்டை ஊற்றினார். இதனை தொடர்ந்து, மனைவியை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :