மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

by Editor / 05-05-2022 05:37:08pm
மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

தருமபுர ஆதீனத்திற்கு ஆதரவாக பேசிய  மதுரை ஆதினதிற்கும் ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாத்துகாப்பு கேட்டு வக்கீல்கள் மனு.

மதுரை வக்கீல் முத்துக்குமார் தலைமையில் பலர் மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் மதுரை ஆதினமடம் 293 ஆண்டுகாலம் பாரம்பாரியம் மிக்கது. திருஞான சம்பந்தரால் தோற்று விக்கப் பட்டது. சமீபத்தில் அவரது உயிருக்கும் ஆதின மடத்திற்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்து விரோத சக்திகள் எந்த நேரமும் மதுரை ஆதினகர்த்தா  மீதும் மடத்தின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் மத மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.  ஆகவே மதுரை ஆதினத்திற்கும், ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via