சாலை விபத்து.. 17 பேர் பரிதாப பலி

by Staff / 23-08-2023 01:31:53pm
சாலை விபத்து.. 17 பேர் பரிதாப பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே பாலம் சில மணி நேரங்களுக்கு முன் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தின் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியுள்ள 30-க்கும் பேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்தில் இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஐஸ்வாலில் இருந்து 20 கி.மீ தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை.

 

Tags :

Share via