பல்வேறு கோயில்களில் இருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் .

by Editor / 01-07-2022 12:12:49pm
பல்வேறு கோயில்களில் இருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் .

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.குத்தாலம் காவல் சரகத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கோயில்களில் உள்ள சிலைகள் சிலைகளில் உள்ள நகைகள் போன்றவை மர்ம நபர்களால் திருடப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் சுவாமி சிலைகளை திருடியதாக மயிலாடுதுறை கார்த்திகேயன் மற்றும் தஞ்சாவூர் பாஸ்கர் ஆகிய 2 பேர் . கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via