திருப்பத்தூரில் போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு!. போலீசார் மண்டை உடைப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கல்நார்சம்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் எருது குத்தி முஷ்ரப் (19) என்ற வாலிபர் உயிரிழந்த நிலையில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் இரவு நேரத்தில் போலீஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் ஆயுதப்படை போலீசார் திருமால் (30) என்பவருக்கு மண்டை உடைந்தது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல உள்ளனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
Tags :