மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் - உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்அனுமதி
மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டு முடித்த பின்னர் வீட்டிற்கு வந்த அவர் பொது மக்களையும் கட்சி தொண்டர்களையும் சந்தித்த நிலையில் , திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது அதனை தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சர்க்கரையின் அளவு திடீரென்று குறைந்ததின் காரணமாக அவருக்கு இந்த உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது .அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
Tags :