தினமலருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
உழைக்க ஓர் இனம், உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து, தினமலர் நாளிதழில் இன்று, 'மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, கக்கூஸ் நிரம்பி வழிகிறது' என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர், 'நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்' என சாடியுள்ளார்.
Tags :