அமைச்சர் உதயநிதி கருத்துக்கு காங்கிரஸ் பதில்
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிலளித்துள்ளார். அதன்படி, “ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களது கருத்துக்களை கூற சுதந்திரம் உள்ளது. அனைத்து மதங்களும் சமம் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. அனைவரது நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
Tags :