பராமரிக்க முடியாததால் பாட்டியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த பேத்திகள்

by Staff / 06-05-2022 11:46:15am
பராமரிக்க முடியாததால் பாட்டியை  தீ வைத்து எரித்துக் கொலை செய்த பேத்திகள்

நெல்லை பேட்டையில்  பராமரிக்க முடியாத காரணத்தால்  பாட்டியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையில் உள்ள ஆதம் நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதிய வேளையில் சடலமொன்று சாலையின் ஓரம் ஏறி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அங்கிருந்து சிசிடிவியில் உதவியால் உடலை கொண்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பழையபேட்டை கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரி மேரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் வயது மூப்பு காரணமாக பராமரிக்க முடியாத நிலையில் தீ வைத்து எரித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

 

Tags :

Share via