கடனால் சிக்கிய குடும்பம்.. இளம் காவலர்களின் மனிதாபிமானம்..

by Staff / 04-09-2023 04:57:10pm
கடனால் சிக்கிய குடும்பம்.. இளம் காவலர்களின் மனிதாபிமானம்..

சென்னை ஆயுதபடையில் பணியாற்றி கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் அருண் கடந்த ஜூலை10 ஆம் தேதி சென்னை ஆயுதப் படையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். காவலர் அருண் விருதுநகர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடும் முயற்சியால் காவலர் ஆனவர்.
அவரது உயர்வு அவரது குடும்பத்தில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வந்தது. கண், காது இயங்காத அவரது தாய் தந்தைக்கு காவலரின் பணி மிக பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் அவரது மரணம் காவலர் அருணின் குடும்பத்திற்கு பேரிடியாக அமைந்தது. கடன் சுமையால் அருணின் குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.இதனை அறிந்த அவருடன் தேர்வான காவலர்களான 2022 பேட்ச் காவலர்கள் அருணின் குடும்பம் நமது குடும்பம். அந்த‌ குடும்பத்தை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என கருதினர். வாட்ஸ் ஆப் குழு மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அவரது பேட்ச் காவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு காவலரும் தங்களால் முடிந்த பணத்தை அனுப்ப ஆரம்பித்தனர்.

 

Tags :

Share via