அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி
அண்ணியுடன் கள்ளக்காதலுக்கு அண்ணன் இடையூறாக இருந்ததால் சர்பரைஸ் தருவதாக கூறி கண்ணை கட்டி அண்ணன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவரது மனைவி யாமினி( 20 ). கடந்த சில மாதங்களாக விக்னேஷின் சித்தி மகனுக்கும் அவர் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விக்னேஷ் சில நாட்களுக்கு முன் தம்பியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி அவரின் மனைவி உதவியோடு அண்ணனை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
Tags :