புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது....அன்புமணி ராமதாஸ் கேள்வி

by Staff / 04-03-2024 11:50:00am
புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது....அன்புமணி ராமதாஸ் கேள்வி

புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து திருவோணம் என்ற புதிய வட்டத்தை தமிழக அரசு உருவாக்கியிருப்பதை பாமக வரவேற்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்குவதாக அளித்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.தஞ்சை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வரும் முன் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via