கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - ஓட்டுநர் உயிரிழப்பு

by Staff / 07-09-2023 03:47:08pm
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - ஓட்டுநர் உயிரிழப்பு

மதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் இருந்து குதித்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 பயணிகளுடன் மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஆண்டிப்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் தங்கபாண்டியன் வெளியே குதித்துள்ளார். இதனால், தலையில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், பேருந்து சாலையோரம் இருந்த முள்வேலி மீது மோதி சிறிய சேதாரத்துடன் நின்றது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via