கர்ப்பிணி மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர் கைது

by Staff / 10-09-2023 12:34:03pm
கர்ப்பிணி மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர் கைது

கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு கிணற்றில் தள்ளிவிட்டு, வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பியதற்காக குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் நடந்துள்ளது. பெண் கிணற்றுக்குள் கயிற்றைப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த நிலையில், 2 மணி நேரம் கழித்து அவரது கணவர் அவரை வெளியே இழுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 21ஆம் தேதி இச்சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்தனர்.

 

Tags :

Share via