மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

by Staff / 10-09-2023 03:59:16pm
மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது


கோவை கோபாலபுரம் பகுதியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர், கண்டறிந்து அவர்களை கைது செய்து வருகின்றனர்,இதன் ஒரு பகுதியாக சாய்பாபா காலனி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, புதுக்கோட்டையை சேர்ந்த 54 வயதான, கனேசன் என்பரிடம் இருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும், அதேபோல உக்கடம் காவல்நிலைய பகுதியில் புதுக்கோட்டையை சேர்ந்த, 41 வயதான குமரேசன் என்பவரிடம் இருந்து, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும், மொத்தமாக இருவரிடம் இருந்தும் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via