தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு பல இடங்களில் கனமழை-வானிலை ஆய்வு மையம் தகவல்

by Editor / 11-09-2023 08:49:55am
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு பல இடங்களில் கனமழை-வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு பல இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags : வானிலை ஆய்வு மையம் தகவல்

Share via