வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில்  7 பேர் பலி.

by Editor / 11-09-2023 08:42:35am
வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில்  7 பேர் பலி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்றுவிட்டு விடு திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் ஆம்பூர் ஒனாங்குட்டை பகுதியை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளாதவும், மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேனில் எத்தனைபேர் பயணித்தனர் என்பது தெரியவில்லை.இந்த விபத்துக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
 

 

Tags : சாலை விபத்தில்  7 பேர் பலி

Share via