உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம்

by Staff / 11-09-2023 11:23:33am
உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம்

ஆந்திரா - தமிழ்நாடு எல்லையான நாட்றம்பள்ளியின் சித்தூர் பகுதி அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. இன்று காலை டெம்போ டிராவலர் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via