அண்ணாமலை குடியரசு தின வாழ்த்து
அனைவருக்கும் சம உரிமை, சம நீதி, ஏற்றத் தாழ்வற்ற சமூகம் போன்ற உயரிய கோட்பாடுகளைக் கொண்ட, பாரதத்தின் அரசியலமைப்புச் சாசனம் நடைமுறைக்கு வந்த இந்த நன்னாளில், அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மகத்தான பாரம்பரியமும் வரலாறும் கொண்ட தேசத்தில் பிறந்தோம் என்பதில் பெருமிதம் கொள்வோம். மக்களாட்சி மலரப் பாடுபட்ட அனைவரின் ஈடு இணையற்ற தியாகங்களை போற்றி வணங்குவோம் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :