சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை

by Staff / 12-09-2023 12:07:58pm
சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. சீமானுக்கு பதிலாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜராகியுள்ளார். முதலில் வழக்கின் விவரம் மற்றும் அதன் நகல்களை பெற்று அறிந்து, அதற்கான பதிலை எழுத்துப் பூர்வமாக அளித்து,
தேவை ஏற்பட்டால் அதன் பிறகே சீமான் நேரில் செல்லலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியர் குறித்து பேசிய அவதூறு வழக்கில், நேற்று ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகி இருந்தார்.

 

Tags :

Share via