இரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை...

by Staff / 02-09-2024 05:08:20pm
இரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை...

விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாகபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் குமார் (65), இவர் தனது மனைவியுடன் கோவையிலுள்ள தனது மகளுடன் சேர்ந்து குடியிருந்து வரும் பொழுது குடிபோதையில் தனது மகள், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு தனது சொந்த ஊரான நாகபாளையம் வந்து தனது மகன் மணிகண்டன் வீட்டில் தங்கிய நிலையில் வேலைக்கு ஏதும் செல்லாமல் குடிபோதையில் தனது மகனுடன் தகராறு செய்து விட்டு வீட்டை விட்டு சென்று உள்ள நிலையில் இன்று அதிகாலை மதுரை to செங்கோட்டை சென்ற இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்துார் இரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ளபட்டதில் இறந்தது குமார் தான் உறுதி செய்யப்பட்டன. மேலும் சம்பவம் குறித்து இரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via