கடையநல்லூரில் தேசீய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இரசாலிபுரம் தெருவில் உள்ள இத்ரிஸ் என்பவரின் வீட்டில் அதிகாலை 5 மணி முதல் கொச்சியிலிருந்துவந்த 6 பேர் கொண்ட தேசீய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இவர் சலப்பு என்கின்ற கொள்கையில் தீவிரமாக பிரச்சாரம் செய்யும் நபராக இருந்ததாகவும்,2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்களிடம் அலைபேசியில் பேசியதாகவும் இவருடைய செல்போன் எண்ணுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து தகவல் பரிமாறப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இவருடைய வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Tags : தேசீய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை.