அண்ணாவை இழிவாக பேசினால் நாக்கு அழுகிவிடும். -- செல்லூர் ராஜூ

by Staff / 16-09-2023 02:21:49pm
அண்ணாவை இழிவாக பேசினால் நாக்கு அழுகிவிடும். -- செல்லூர் ராஜூ

மதுரை மாநகர் அ. தி. மு. க. , தெற்கு தொகுதி சார்பாக அண்ணா பிறந்த நாள் விழா நேற்று இரவு தவிட்டு சந்தை பகுதியில் உள்ள பந்தடி 5 வது தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். தி. மு. க. வில் எம். ஜி. ஆர். , நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை தான் முன்னிலைப்படுத்துவார். கட்சியில் 28-வது இடத்தில் இருந்தவர் கலைஞர். அண்ணா இருக்கும் வரை கலைஞரை தட்டியே வைத்திருந்தார். அண்ணா அவர்கள் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அ. தி. மு. க. விற்கு தான் உரிமை உண்டு. தி. மு. க. வினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்ட னர். கலைஞர் கருணாநிதிக்கு மகன் ஸ்டாலின் அப்பா விற்கு தப்பாமல் பிறந்திருக் கிறார். தற்போது சிலர் படித்தவனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலிபேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலி பேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான். நாங்கள் கூட கலைஞரை தற்போது மரியாதையாக தான் பேசுகிறோம். ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால் தமிழ்சமூகம் அவர்களை மிதித்து விடுவார்கள். ஆளும் கட்சி என்று மப்பில் பேசலாம். அண்ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா பல்வேறு சாதனை செய்தவர். அண்ணாவை பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும் என்றார்.

 

Tags :

Share via