செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பகுதியில் திடீரென செல்போன் வெடித்து சிதறியதில் கோகிலா (வயது 32) என்கிற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வாட்ச் கடை நடத்தி வரும் கோகிலா, போனில் சார்ஜ் செய்தபடி நீண்ட நேரமாக கால் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக போன் வெடித்து சிதறியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :