சீமான் வழக்கு அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த அவதூறு வழக்கு அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இன்று நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விடுமுறை காரணமாக வழக்கு அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் 2011ஆம் அண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
Tags :