தீவிபத்தில் 4பேர் பலி-3பேர் கவலைக்கிடம்
உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அவர்களை காப்பாற்ற முயன்ற தாத்தாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தீக்காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றன.
Tags : தீவிபத்தில் 4பேர் பலி-3பேர் கவலைக்கிடம்