ராகுல் காந்தி குறித்து அவதூறாக பதிவிட்ட பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ்  கைது...

by Editor / 01-10-2023 09:49:56am
ராகுல் காந்தி குறித்து அவதூறாக பதிவிட்ட பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ்  கைது...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ராஜ் பாஜக இளைஞரணி சமூக ஊடகப் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில் பிரவீன் ராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து  கடந்த 1 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தும் வகையிலும் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரவீன் ராஜ் பதிவிட்டு கருத்து குறித்து கரூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்ததாகவும், புகாரின் பெயரில் தற்போது பிரவீன் ராஜை கரூர் காவல்துறையினர் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். 

 

Tags : ராகுல் காந்தி குறித்து அவதூறாக பதிவிட்ட பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ்  கைது...

Share via