உத்தரப்பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம்- பிரியங்கா காந்தி

by Admin / 13-11-2021 06:24:19pm
உத்தரப்பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம்- பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம்... இம்மாத இறுதியில் தொடங்குகிறார் பிரியங்கா காந்தி...

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இம்மாதம் இறுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.  

2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி என எதிர்பார்க்கப்படும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.

பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் நேரடியாகவும், கூட்டணியாகவும் ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் போட்டியை சந்திக்கின்றன.  இவை தவிர மாநில கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

பாஜக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. அதேபோல காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 
 உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளரான பூபேஸ் பாஹீல், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.  

 ஆலோசனையின் போது நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் டெல்லியில் உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

 

Tags :

Share via