வங்கிக் கணக்கில் திடீரென வந்து விழுந்த ரூ.756 கோடி

by Staff / 06-10-2023 02:20:07pm
வங்கிக் கணக்கில் திடீரென வந்து விழுந்த ரூ.756 கோடி

தஞ்சாவூர் கோடாக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளரான கணேசன் என்பவரது கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து கணேசன் அவரது நண்பர் ஒருவருக்கு ரூ.1000 செலுத்திய நிலையில், அவர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி மீதம் இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுதொடர்பாக வங்கி மேலாளரை சந்தித்தபோது போனில் தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்டது சர்ச்சையானது.

 

Tags :

Share via