தமிழக மீனவர்களுக்கு வெட்டு இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மணியன் ,வேல்முருகன் ,சத்யராஜ், கோடிலிங்கம் ஆகிய 4 பேர் கோடியக்கரைக்கும் தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு படகில் வந்த மூன்று இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை கத்தியால் தாக்கி சுமார் 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி, உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.வெட்டுகாயம் பட்ட மீனவர்கள் மணியன், கோடிலிங்கம் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : தமிழக மீனவர்களுக்கு வெட்டு இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்.