சாலைவிபத்தில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி

by Staff / 09-10-2023 12:57:53pm
 சாலைவிபத்தில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு பகுதியில் நிலையூர் கால்வாயில் பைக்கிலிருந்து நிலை தடுமாறி விழுந்த கொத்தனார் மற்றும் கல்லூரி மாணவர் ஆகிய இருவரும் பலியானார்கள். மதுரை திருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு வடக்கு தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் நிதிஷ்குமார்( 18) என்பவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாண்டியின் மகன் தமிழரசன்( 24) கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை டூவீலரில் சென்ற பொழுது சின்ன உடைப்பு கால்வாயில் நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தனர். பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் தமிழரசன் நிதிஷ்குமார் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via