மீன்பிடி தொழிலாளிக்கு சரமாரி கத்தி குத்து

by Staff / 10-10-2023 12:53:59pm
மீன்பிடி தொழிலாளிக்கு சரமாரி கத்தி குத்து

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நல்லூர் தேனாம்பாற தலவிளையைசேர்ந்தவர் அபிஷேக்( 21 ) , மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கும் குளக்கச்சி பகுதியை சேர்ந்த சஜி (19 ), சஜித் (21 ), சஜின் (19), கொல்லஞ்சி பகுதியைச் சேர்ந்த ஜெகன்( 19 )ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது , நேற்று அபிஷேக் கொல்லஞ்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது , சஜி, சஜித், சஜின் , ஜெகன் ஆகியோர் தடுத்து நிறுத்தி கார்த்தியாலும், இரும்பு கம்பியாலும் கையாலும் சரமாரியாக தாக்கியதில் அபிஷேக்-கின் பற்கள் முழுவதும் உடைந்துள்ளது. மேலும் தாடைகளும் காயமடைந்துள்ளது. கத்தியால் குத்தியதில் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் முதுகை கடித்தும் காயப்படுத்தி உள்ளனர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அபிஷேக் , கத்தி அலறி கூச்சலிட்டுள்ளார். இதை அடுத்து அக்கம்பாக்கத்தில் அங்கு கூடி உள்ளனர். இதை பார்த்த நான்கு பேரும் அவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து வித்துவிட்டு , அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதை பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இது குறித்து மார்த்தாண்ட போலீசார் வழக்கு பதிவும் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via