சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தின் கீழ் கோவில் பூசாரி கைது

by Staff / 11-10-2023 03:12:25pm
சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தின் கீழ் கோவில் பூசாரி கைது

பவானி பகுதியை சேர்ந்த 22 வயதான கோவில் பூசாரி ஒருவர் கோபி பகுதியில் உள்ள 16 வயது சிறுமியின் வீட்டில் சாமி சிலைக்கு பூஜை செய்வதற்காக வந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை அழைத்து சென்று பூசாரி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனா். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு பூசாரியை கைது செய்தனர்.

 

Tags :

Share via