ரெய்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம்

by Staff / 13-10-2023 12:13:37pm
ரெய்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம்


பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், 23 அட்டைப்பெட்டிகளில் மொத்தம் ரூ.42 கோடி மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பூட்டி வைத்திருந்த அறையின் உள்ளே மெத்தைக்கு அடியில் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்தது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தல் பணிக்காக சென்னையில் இருந்து ஹைதராபாத் வழியாக பெருமளவு பணம் கொண்டு செல்லப்படுவதாக ஐடி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

 

Tags :

Share via

More stories