மின்சாரம் தாக்கி நிதி நிறுவன ஊழியர் பலி

by Staff / 15-10-2023 04:33:04pm
மின்சாரம் தாக்கி நிதி நிறுவன ஊழியர் பலி

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிதி நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகில் உள்ள பண்டாரவிளை, சுயம்புலிங்க சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சரவணபாலா (29). இவர் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பில் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது வீட்டில் உள்ள எலக்ட்ரிக் சுவிட் போர்டில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி  ஜெமிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via